இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் வேண்டும் விடுதலை “

” பாரதி பாடித் துடித்த விடுதலை ! காந்தி மகான் காணத் துடித்த விடுதலை ! பகலுமன்றி இரவுமன்றி நள்ளிரவில் விடியலாய் விடிந்தது ,விருப்பமாய் விளைந்தது. விடுதலை தேசமாயினும் மீண்டும் , ”வேண்டும் விடுதலை” என வேண்டித்தான் நிற்கின்றோம் விருப்பித்தான் கேட்கின்றோம். வறுமையும், ஊழலும் நிரந்தரம் ஆகிவிட்டது விலைவாசி உயரத்தில் , விசுவாசம் பள்ளத்தில் உள்ளத்தின் கனவுகளில் லச்சமும் கோடியுமே ! கல்லறை நிலங்கள் கூட காணாமல் போகும் நிலை சில்லறை போல் வாணிபமும் சிதறியே போன கதை அண்டைநாட்டு தொழிலாளிகள் நம்நாட்டின் முதலாளிகள் தண்ணீர் தண்ணீர், எனக் கண்ணீர் வடிக்கப் பல, தேசங்கள் இருக்க,  பாட்டில் போட்டு விற்றுவரும் பார்களையும் தாண்டி இன்று அரசே விற்கிறது. பாஸ்மார்க் வாங்கவேண்டியவன் டாஸ்மாக் வாயிலில்... பாதைகாட்டவேண்டிய அரசு போதைஏற்றும் வேலையில்... பொதுத்துறை எல்லாம் தனித்துறை ஆக்கிவிட்டால் துரை களுக்கு  இங்கே என்ன வேலை ? சாதிக்க பிறந்தவனை சாதிக்குள் மாட்டிவிட்டு மதமும், மொழி யுமாய் பிரித் தாளும் சூழ்ச்சிக்கு , வீழ்ச்சியே ! என்றும் காட்சியாய் வேண்டும்   தாத்தா கொடுத்த

நம்பி கை வைப்போம்

வல்லரசு தேசத்தில் கூட வாழ்வாதாரம் இழந்த நிலை எம் நாட்டு மக்களுக்கோ விலைவாசி உயர்ந்த நிலை பரண் மேல் பருப்பு விலை ஒரு ரூபாவாம் அரிசி விலை தனியார் மயம் தாராள மயம் இதுதான் இவர்களது தாரகமந்திரம் இலவசங்கள் பல உண்டென்பார் இவன் வசமுள்ள ஓட்டுக்காக பல குடும்பங்கள் வறுமையில் வாட‌ சில கும்பங்களே அரசியலில் ஆட‌ போராட்டம் நடத்தகூட போதுமான உரிமையில்லை குண்டர்களும் தொன்டர்களும் கும்பலாய் தாக்குகின்றனர் குண்டு களும் தோட்டாகளும் குறிபார்த்தே இருக்கின்றன‌ கொலையும் கொள்ளயும் கொள்கையாகி விட்டன‌ புகைப்பதும் குடிப்பதும் புனிதமாகிவிட்டன‌ நோய்களும் நொடிகளும் நோகமல் உள்ளன ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும் மனிதா‌பிமான‌ம் ம‌லிந்து விட்ட‌ன‌ இதயம் கூட இயந்திரத்தில் இயன்குகின்றனவாம் இப்படி நாட்டில் பிரச்சினைகளோ ஏராளம் இதில் எங்கள் பிரச்சினையும் தாராளம் கம்பம் நட்டோம் கம்பி இழுத்தோம் காளை போல் கை வ‌ண்டி இழுத்தோம் சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம் க‌டும் குழிகள் பல தோண்டிவிட்டோம் சாக்க‌டையினுள் புகுந்து ப‌ல‌ ஜாயிண்டு க‌ள் அடித்துவிட்டோம் க‌ணினியை கூட‌ க‌ச்சித‌மாய் க‌ண்ணிய‌மாய் இய‌க்குகின்றோம் சின்ன‌ சின்ன‌ எக்ஜேஞ்சு க‌ளுக்கு ந

என் விருப்பமும் திருப்பமும்

விருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது ! பூத்துக்குலுங்கும் ரோஜா மலரில் தேன் உண்ண வண்டுக்குவிருப்பம்! பூவையர் கூந்தலில் இருந்து சிரிக்க அந்த ரோஜாவுக்கு விருப்பம்! என் எண்ணங்களில் தோன்றிய விருப்பங்களை எடுத்துக்கூற எனக்கும் கொஞ்சம் விருப்பம் ! அதிக‌ம் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌ விருப்ப‌ம் ! ஆனால் ஏழ்மையால் ஏற்ப‌ட்டதோ திருப்ப‌ம் ! ப‌டித்த‌ ப‌டிப்பிற்கேற்ற‌ ப‌த‌வி பெற விருப்ப‌ம் ! ஆனால் ல‌ஞ்ச‌ம் என்றசொல்லால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் ! வேலை யில்லாத்திண்டாட்ட‌த்தை ஒளித்திட‌வும் விருப்ப‌ம் ! ஆனால் வேலை தேடுவ‌தே வேலையானால் ஏற்படுமோ திருப்ப‌ம் ! நான் காத‌லித்த‌ அவ‌ளை கை பிடிக்க‌ விருப்ப‌ம் ! ஆனால் ஜாதி என்ற‌ சாக்க‌டையால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் ! வ‌ர‌த‌ட்ஷ‌னை இல்லா திரும‌ண‌த்தில் தான் விருப்ப‌ம் ! ஆனால் த‌ட்ஷ‌னை வேண்டாமென்றதால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் ! போதையால் பாதை மாறிப்போவோரை திசைதிருப்பவும் விருப்பம்! ஆனால் போதையே அவனுக்குப் பாதையானால் ஏற்படுமோ! திருப்ப‌ம் ஊழ‌ல‌ற்ற‌ ஆட்சியில் தான் என‌க்க்கு விருப்ப‌ம் ! ஆனால் ஊழலே ஆட்சீயானால் நாட்டில் ஏற்படூமோ நல்ல திருப்பம் ! என் விருப்பங்க‌ள் யாவும் நிரைவேறினால்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ பாட்டுக்கொருவ‌ன் பார‌தி பிற‌ர் பாட்டுக்குள்ளும் ஒருவ‌ன் பார‌தி வீட்டுக்குள் அடிமை கொண்டவள் வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான் ஏட்டை தொட்டால் தீமை எனற நிலை மாற்றி ஏட்டையும் பண் பாட்டையும் பாடுத‌லாய் கண்டான் மாட்டை கட்டியது போல்தொழுவில் பார்த்தவளை மாடு என்ற சொல்லே செல்வம் என பொருள் கண்டான் கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும் பெண் பாட‌ம் க‌ற்பிப்பதாய் க‌ன‌வு க‌ண்டான் காத‌லும் சாதியும் பெண்டிற்கில்லை என்ற‌வ‌ன் காத‌லில் க‌னிந்து பெண்காவிய‌ம் ப‌டைக்க‌க்க‌ண்டான் ப‌ட்ட‌ங்களையும் பாட திட்டங்களையும் பயின்றதோடு ச‌ட்ட‌ங்க‌ளையும் ஆணுக்கு ச‌ரியாக‌ ஆழ‌க்க‌ண்டான் விட்ட‌த்தை பார்த்தேவிட‌லை ப‌ருவ‌ம் க‌ழித்த‌வ‌ள் திட்டம் போட்டுவாழ்க்கையை திருத்திடக்கண்டான் சுதந்திரக்கனவு சுந்தரமாய் பலித்ததுநிர‌ந்த‌ர‌ க‌ன‌வுக‌ளும் நிம்ம‌தியாய் ப‌லித்த‌து பெண்ணுக்காய் க‌ண்ட‌க‌னா புதுமை பெண்ணுக்காய் அமைந்த‌த‌ன்றோ! ! ! 

ச‌ண்டாளி!

கருவிழிகளின் மின்னல் கீற்றுகளாய் கண்டவளின் கண்கவர் கண்களில் வண்ணத்துப் பூச்சிகளும் வட்டமிட வண்டுகளும் மலெரென்று மொய்த்துவிட நான்மட்டும் விழாதிருப்பெனோ ! நானும் விழுந்துவிட்டேன் விண்ணவள் கண்ணுக்குள் ! நிலவவள் நெஞ்சுக்குள் ! பார்த்தோம் ப‌ழ‌கினோம்பாச‌ம் ப‌கிர்ந்தோம்தாகம் தணிக்கவே தனிமை நாடினோம் காத‌ல் தாக‌த்தால் க‌ட்டிய‌ணைத்து முத்த‌மிட‌காட்டிய‌ அவ‌சரத்தில் காத‌லிய‌வ‌ள் சொன்னாள் க‌ல்ய‌ண‌ம் ஆக‌ட்டும் மென்று காத்திருந்தேன் ம‌ணிக‌ண‌க்கில் பாத்திருந்தேன் நாள்க‌ண‌க்கில் பெண்பார்க்கும் ப‌ட‌த்தில் பித்தலாட்டம் செய்துவிட்டாள் க‌ண்ட‌ அவ‌னை க‌ண‌வ‌னென்றாள் காத‌ல‌ன் எனை க‌ள்வ‌னென்றாள் வ‌ண்டாய்சுற்றிய எனக்கு வ‌ண்டாள் தந்த பட்டம் பைத்தியமென்று ஏனென்ற‌ போது நீ என் சாதி யில்லை ம‌த‌மும் இல்லை என‌வே ந‌ம் திரும‌ண‌த்தில் ச‌ம்ம‌த‌மும் என‌க்கில்லை என்றாள் ச‌ண்டாளி!  என்றும் நீ என்னோடுதான்   சொந்தங்களே சுமையானது சோகங்களே சுகமானது பந்தங்களே பகையானது பாசங்களும் பகல் வேசமானது நெருங்கிய உறவுகளும் நெருங்காது போனது விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது கனிந்த காதல் கூட கசந்து போனது நோய்களும் நொடிகளும் நோகாமல் உள்ளன ப

என்னவன்

------------ ‍‍‍‍‍‍‍‍‍என்னவனே என் மனதை கொள்ளை கொண்டவனே மன்னவனே என்னுயிரை மீட்டுத்தந்தவனே உன் புகழை பாடுதற்கு உரியவள் என்றும் நான்தானே தேனமுதில் பிழிந்தெடுத்த தெள்ளமுதும் நீதானே பாலமுதில் கடைந்திட்ட‌ வெண்நெய்யும் நீதானே சிங்கமென நீ நடந்து சிரித்துவரும் வேளையிலே தங்கமென தாவணிகள் தானாகவே வந்தாலும் தடுக்கிவிழா பார்வை தனை தரணியங்கும் படைத்திட்டாய் கன்னியரின் பார்வையிலோ காளையர்கள் அழிந்திடுவ‌ர் என் க‌ண்ண‌னுன் பார்வையிலோ கன்னிய‌ர்க‌ள் வழிந்திடுவ‌ர் வான‌த்தில் இருப்ப‌தோ ப‌ல‌ந‌ட்ச‌த்திர‌ம் என் ம‌ன‌வான‌த்திலோ நீ யொரு துருவ‌ ந‌ட்ச‌த்திர‌ம் குடிப்ப‌ழ‌க்க‌ம் இல்லா நீ ந‌ல்ல‌குடிப்ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ன் மான‌த்திற்கு மானைச் சொல்வ‌ர் உன் த‌ன்மான‌த்திற்கு ய‌த‌னைச் சொல்வேன் க‌ண்ட‌வ‌ள் பின் செல்லாது எனைக்க‌ண்ட‌ பின் காத‌ல் கொண்டாயே மாற்றாளுக்கு ம‌னைவியெனும் மாங்க‌ல்ய‌த்தை பூட்டி விட்டால் மான‌த்தோடு மாண்டிடுவேன் மாம‌னுன் காத‌லியாய்! 

காதல் + நீ = காதலி

முந்தானை முடிப்பினிலே முடிந்து வைத்த முக்கனி போல் சந்தனத்தில் சவ்வாதை சமமாக சேர்த்ததுபோல் செவ்வாழைக் கனியினிலே செய்துவைத்த செந்தூரம் போல் சங்கீத சன்னதியில் சந்தங்களை கோர்த்தது போல் சிந்துகின்ற வான்மழையும் தங்குகின்ற தாமரையே! ஏங்குகின்ற என்மனதில் தூங்குகின்ற தூரிகையே! பார்த்து நிற்க்கும் என் விழியை காக்கவைக்கும் காரிகையே! என்காதல் தனை சொன்ன பின்னும் உன் காதல் கண்பாரா காதலியே ! உன்முகத்தில் தெரியுதடி ஓராயிரம் ஒளிநிலவு காதலெனும் கனிரசத்தை என்மீது கொட்டுவாயோ ! துளியளவு! என் காதலியாய் நீ ஆகிவிட்டால் என்மனைவியாய் நான் ஆக்கிடுவேன் !!!

சுனாமி"

கடற்கரையில் கட்டிய மணல் வீடுகள் கடல் அலைகளால் அழிவதைக் கண்டிருக்கிறேன் பேரலை வந்து வீடுகளியும் அழித்தபேரளிவை அன்றுதான் கண்டேன் ! பெளர்ணமியன்று கடல் கொஞ்சம்கொந்தளிக்கு மெனச்சொன்னார்கள் மூர்கத்தனமான கொந்தளிப்பால் மூர்ச்சையானது எத்தனை உயிர்கள்யாரையோ தேடித்தேடி அவர் வராததால்கரைவந்து திரும்புகிறாய் எனகண்ணியமாய் நினைத்தேன் ஆனால்நீதேடிய உயிர்களும் உடல்களும் உடமைகளும்தான் எத்தனை எத்தனை !உன் அலைகளை எம்மக்கள்பார்த்துரசிப்பதால் தான் அடிக்கடிவந்து போகிறாய் என வாஞ்ஞையோடு இருந்த என்னை வஞ்சித்து விட்டாயே கடல் அலைபோலத்தான் மனிதவாழ்கையும் இன்பமும் துன்பமும் வந்துவந்துபோகு மென பெரியோர்கள் சொல்ல கேள்விஅதனால் தானோ என்னவோஅமைதியாய் வாழ்ந்த எம் மானிடஉயிர்களை சுனாமி என்ற பினாமியால் வந்து வந்து போக வைத்தாயே மக்கள்கூட்டம் அதிகமானால் அலைகடெலென கூட்டம் என்போம்அதனால் தான் அலையால் கூட்டம்கூட்டமாய் கொன்றுகுவித்தாயோ! என் சமுதாயத்தில் ஒரு உயிர்போனாலும் ஓரயிரம் சடங்குகளும் சம்பிரதாயங்களும், சட்டதிட்டங்களும் ஆனால் அன்று உன் கோரப்பசியால் உயிரை உணவாக்கி உடலைகழிவாக்கியனாயே! உன்னால் உயிர்போன உடல்களை ஒரேகுழியில் ஒரேசடங்காய்
உயிருக்குள் உயிர் வளர்தாய் உலகத்தையே பார்க்கவைத்தாய் ஊனிற்க்கு உதிரம் கொடுத்தாய் உன்னில் எனைப் பார்த்தாய் அறிவுக்கு அறிவு கொடுத்தாய் அன்புக்கு அன்பை கொடுத்தாய் கண்ணின் கரு விழிதந்தாய் காலால் நடக்க வைத்தாய் கைகளால் செயல் படவைத்தாய் காதின் ஒலியால் கேட்கவத்தாய் நினைவில் என்றும் நினைக்க‌ வைத்தாய் நித‌மும் பேசும் வார்த்தை தந்தா‌ய் வெண்ணில‌வாய் குளிர்தந்தாய் வெண்பனியாய் வெப்பம் தணித்தாய் தென்றல் போல் சுகம் தந்தாய் தேனீர் போல் சுவை த‌ந்தாய் திக‌ட்டாத‌ இன்ப‌ம் த‌ந்தாய் இத்த‌னையும் த‌ந்தாய் நானுன‌க்கு என்ன‌ த‌ந்தேன்! என்னை த‌ந்த‌வ‌ளுக்கு என்ன‌ த‌ந்தால் ஈடாகும்!அம்மா!

அன்புள்ள அப்பாவுக்கு

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை ஐம்ப‌துஆண்டுக‌ள் அன்போடு வாழ்ந்தாலும் ஐய‌மில்லை ய‌ய்யா உம் பாசம் பெரிய‌தையா க‌ண்போல‌ வ‌ள‌ர்த்த‌ நீங்க‌ள் கண், க‌ல‌ங்க‌ விட்டுக ‌ண‌வ‌ன் பிரிவால் க‌ல‌ங்கும் என் தாயின்க‌ண்ணீரை க‌ண்டீரோ? காணாது சென்றீரோ? அந்த‌ நாள் நினைவுகளும் எங்களோடு வாழ்ந்த ‌அந்த‌நாள் ஞாப‌க‌ங்கங்களும் ! நிழலாடு கின்றதையா ! அன்பை பொழிந்துவிட்டு அன்னையாய்யாக்கிட்டு அன்பை சுமந்து அல்லல் படும்படியாய் ஆக்கிட்டுச்சென்றீரோ!! அவ‌ச‌ர‌மாய் சென்றீரோ! ஐந்தாறு மாதங்களில் அவிந்து விடும் அவர் நினவு பதினாறுக்கு வந்தாரும் சொன்னார்கள்வாயார‌ அழுதார்க‌ள் ! ஆண்டுக‌ள் ப‌ல‌ ஆயினும் உம் நினைவுக‌ள் அழிய‌வில்லை எம் நெஞ்ச‌மும் மற‌‌க்க‌வில்லை! த‌வ‌ருக‌ள் செய்த‌ போது எனை த‌ண்டித்தீர்க‌ள் த‌ரங்கெட்ட‌ வார்த்தையில் திட்டிய‌போது எனை ம‌ன்னித்தீர்க‌ள் அன்று வாங்கிய அடிகளால் உடல் நொந்தது இன்று வாங்கிய அடியால் உள்ளம் நொருங்கியது! தந்தை சொல் கேட்ட தணையன் தரங்கெட்டு போனதில்லை, த‌ந்தை வ‌ழி ந‌ட‌ந்தோன் ம‌ன‌ங்கெட்டு போன‌தில்லை ! நீர் இல்லாத‌ வாழ்க்கை நீரில்லா மீன் போலானது! நீரில்லா நீறோடையில் நீந்த

இ)தையல் வலி

உன் பார்வையெனும் ஊசியில் என் அன்பெனும் நூல் கோர்த்து நம் இருவர் இதயத்தையும் ஒன்றாய் தைத்தாய் தைத்த நீயே! பிரித்து விட்டாய்! தைத்த போது வலிக்காத இதயம் தையல் பிரித்த போது வலிக்கிறதே   ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்
அடுத்த(அ)வள்(ன்) தென்றலின் இனிமை கொண்டவள் தேனீர் சுவை தந்தவள்,வந்தவள் என் மனதில் நின்றவள் வானத்து நிலவின் ஒளிகொண்டவள் என்னவள் என்றவள் அடுத்தவ(ள்)ன் நாகிவிட்டாள்! அவள் காதல் கனவுக்கு இதமான அவள் காதல் மனதுக்குவேறுவிதமானது !! உடலுக்கு சிகையான அவள் காதல் உறவுக்கு பகையானது ! இன்பத்தின் தேடலான அவள் காதல் துன்பத்தின் பாடலானது ! எண்ணத்தில் கூடலான அவள் காதல் ஏக்கத்தில் ஊடலானது! சம்சாரமாக்க துடித்த அவள் காதல் மின்சாரமானது ! ஜாலியாக போன என் காதல் நான் காலியாக காரணமும் ஆனது

இன்றைய காதல்

மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று! சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று அன்றய காதல் கல்லறயில் அல்லது கல்யாணத்தில் முடியும்! இன்று சில்லறையில் அல்லது சில அறையில்!முடியும்!

காலம் மாறிப்போச்சு

: அம்மிகள் காணாது போனதோடு அம்மாக்களும் காணாது போனார்கள்! மம்மியாய் வாழ்கின்றவர்கள் டம்மியாய் வாடகைக்கும் கிடைக்கின்றனர் ! கணினி என்பது மனிதவாழ்வில் கணிசமான அங்கமாகிவிட்டது! கணினியை கற்போர் காமத்தையும் பயிலுகின்றனர்! மென்பொருள் நிருவனங்களில் படுக்கையறைகளும் பதுங்கியிருக்கின்றனவாம்! திரைப் படங்களெல்லாம் திரை யில்லாபடங்களாகவே காட்சியளிக்கின்றன! தமிழ்பாடல்களில் ஆங்கிலமே அதிகமாயிற்று!, அங்கங்களை மறைத்த ஆடைகள் அங்கங்கு மறைப்பதால் ஆபாசமாகவே இருக்கின்றன! குட்டிகளுக்கெல்லாம் புட்டிகளே பாலூட்டுகின்றன! பாலூட்ட படைத்தவைகளே ! படு கவர்ச்சியாக் கப்படுகின்றன! ஆ_வின் பாலெல்லாம் ஆவி இல்லாது பைகளிலும் கிடைக்கின்றன! வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது போய் ,பொய் விளம்பரமே வியாபாரமாக்கப்படுகின்றன! அசல் என்ற உண்மை போய் பொய் போலிகளே புரள்கின்றன! பொன் நகை என்பது பெண் நகையாகிவிட்டது ! குங்குமத்தில் வைத்த பொட்டு நிறம் மாறியதோடு வடிவமும் மாறி ஒட்டவசதியாய் பசையாக்கப்பட்டுள்ளது! பெண்கள் ஆண்களின் உடையிலேயே அலாதியாய் உள்ளனர்! உடன் உறவுகளுக்குள் உடனிருந்து மகிழ வேண்டியவர்கள் உடல் உறவுக்குள்ளே உல

மனிதனின் மாண்பு

மனிதன் இவனொரு மகத்தா பிறவி மண்ணில் இவனொரு புண்ணிபிறவி கூடிவாழ்வது தான் இவனது பழமை குடித்து வாழ்வது தான் இவனது புதுமை கொடுத்துக்கொடுத்தே வாழ்ந்தவன் கெடுத்திக் கெடுத்தே வாழ்கின்றான் புறாவில் தூதனுப்ப தொடங்கியவன் புதுபுது தூதுகள் நிதம் தினம் படைக்கின்றான் குரங்கிலிருந்துதான் பிறந்தோம் என்பதை தன் குணங்கொண்டே அவ்வப்போது உணர்த்துகின்றான் கொலையும் கொள்ளையுமே கொள்கையாக்கியவன் வலையை விரிப்பதையே கலையாக்கிக் கொண்டான் விலைகொடுத்தே பட்டமும் பதவியும் பெறுகின்றவன், துப்பாக்கியும் தோட்டாவுமே துணைக்கு வைத்திட்டான் அதிகாரம் கொண்டவன் சதிகாரனாகவே உள்ளான் இலவசங்கள் பல உண்டென்பான் இவன் வசமுள்ள ஓட்டுக்காக பதவிக்கி வந்ததுமே பழைமைதனை மரப்பான் … .. ஓட்டிட்டவனை ஓட்டாண்டியாக்கிடுவான் விசுவாசி நானென்பான் விலைவாசியை ஏற்றிடுவான் மின்வெட்டை அதிகரித்து கல்வெட்டில் காவியம்படைப்பான் மானத்தின் உச்சமென பிறந்தவன் அவ மானத்தின் அச்சமென ஆகிவிட்டான் கர்மவீரனை கூட தோற்கடித்தவன் மாவீரனை போல் பாசாங்கு செய்வான்... மனிதமாண்பு பற்றிப்பேசுகையில்  மகாத்மா ஒருவரையே தன் மனதினுள்: புதைத்தான், அவரையும் வாழவிடாது கொன்றே புதைத்

விழிப்புணர்வு

எத்தனை கடவுள்கள் எததனை மதங்கள் இத்தனை இருந்தும் இயம்புவ தென்ன? இயன்ற வரை பிறருக்காய் இயல்பாய் உதவிடு வாழும்வரை கூட வருவோர் மனம் வலிக்காமல் வாழ்ந்திடு வந்தது ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை வாழ்ந்த வாழ்க்கையை வாழ்த்தவேண்டும் தலைமுறை, நம் பெயரை ஊர் சொல்லவேண்டும் பலமுறை, உலகமே போற்ற வேண்டும் ஏழுதல முறை.1!! சாதிமதமில்லா சனத்தை படைப்பதும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைப்பதும் சாலையை கடக்க விழி இலாருக்கு வழிகாட்டவும் பாலையை பண்படுத்தி பாங்காய் பயிர் இடவும் உழவுத்தொழிலால் ஊரும் தழைத்திட வும் களவுத் தொலின்றி கண்னியமாய் வாழ்ந்திடவும் நோய் நொடிகள் இல்லா சமூகம் படைக்க மாசில்லா தரணியில் கொசு இல்லாதிருந்தாலே மானிடனை கொண்ட நோய் மாண்டு விடும்  மறுகணமே,பிள்ளையின் பட்டு போன்ற பாதமது சொட்டு சொட்டாய் மருந்திட்டால் இளம் பிள்ளை வாத மெனும் ஊனமிலா து மனிதசனம் படைத்திடலாம் , அவன் திட்டமிட்டு படித்திட்டால் பின் நாளில் சோற்றுகு பஞ்சமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் வளமுடனே! காலை முதல் மாலை வரை கண்ணியம் மாறாது கருத்தாய் இருந்திட்டால் இரவென்ன பகலென்ன சாலை என்ன சோலை என்ன விதி என்ன வீதி என்ன வீழ்ந்திடாது வாழ

என்றும் நீ என்னோடுதான்"

சொந்தங்களே சுமையானது, சோகங்களே சுகமானது, பந்தங்களே பகையானது, பாசங்களும் பகல் வேசமானது. நெருங்கிய உறவுகளும், நெருங்காது போனது விரும்பிய உறவுகளும், விரும்பாது போனது. கனிந்த காதல் கூட, கசந்து போனது. நோய்களும் நொடிகளும், நோகாமல் உள்ளன. பசியும் பட்டினியும், பகையில்லாது போனது. சமுதாயம் என்பார்வையில், சங்கடமானது. ஏமாற்றும் ஏமாற்றமும் ஏகமாய் உள்ளது. குண்டுகளும் தோட்டாவும் குறிபார்த்தே இருக்கின்றன. கொலையும் கொள்ளையும் கொள்கையாகிவிட்டன. உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கியது போல், மனித மனமும் சுருங்கிப்போய்விட்டது. நிழல் தேடும் மரங்களே, நிஜமாகி போனது. இத்தோடு முடிந்ததா? என்றால் பத்தோடு பதினொன்றாய் வருமையும் சொன்னது , "என்றும் நீ என்னோடுதானென்று"

பொன் மானைத் தேடி.........

..... பொன்மானாய் தேடி வந்தோம் அது பொய்மானாய் போய் விடுமோ ! பொற்குவியாய் நாடி வந்தோம் அது வெற்குவியாய் ஆகிடுமோ ! பொற்கிளி தான் என எண்ணி , யதை பெற்று விட ஓடி வந்தோம் கையில் கிடைப்பதற்குள் காணாமல் போய்விடுமோ BSNL – லில் வேலை இது பத்திர மானதுதான் என எண்ணி பணிந்து பணிந்து தான்பணி செய்தோம் பத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப் பத்திர மாய் ஆகிடுமோ விடுமோ ! இது பொன்முட்டை யிடும் வாத்து, என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதை பொருக்காத நிர்வாகமும் பொல்லாத அரசாங்கமும் பொசுக்கித்தான் போட்டிடுமோ ! ”பங்கு” போட்டு மாற்றாருக்கு விற்றுத்தான் தீர்த்திடுமோ பத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல் பற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு , கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு , கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்து வலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்று காவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும் எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோ நிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலே கண்ட கனா வாய் பலிக்காமல் போய்விடுமோ இப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய், வறுமைய