உயிருக்குள் உயிர் வளர்தாய்
உலகத்தையே பார்க்கவைத்தாய்
ஊனிற்க்கு உதிரம் கொடுத்தாய்
உன்னில் எனைப் பார்த்தாய்
அறிவுக்கு அறிவு கொடுத்தாய்
அன்புக்கு அன்பை கொடுத்தாய்
கண்ணின் கரு விழிதந்தாய்
காலால் நடக்க வைத்தாய்
கைகளால் செயல் படவைத்தாய்
காதின் ஒலியால் கேட்கவத்தாய்
நினைவில் என்றும் நினைக்க‌ வைத்தாய்
நித‌மும் பேசும் வார்த்தை தந்தா‌ய்
வெண்ணில‌வாய் குளிர்தந்தாய்
வெண்பனியாய் வெப்பம் தணித்தாய்
தென்றல் போல் சுகம் தந்தாய்
தேனீர் போல் சுவை த‌ந்தாய்
திக‌ட்டாத‌ இன்ப‌ம் த‌ந்தாய்
இத்த‌னையும் த‌ந்தாய்
நானுன‌க்கு என்ன‌ த‌ந்தேன்!
என்னை த‌ந்த‌வ‌ளுக்கு
என்ன‌ த‌ந்தால் ஈடாகும்!அம்மா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு