விழிப்புணர்வு


எத்தனை கடவுள்கள் எததனை மதங்கள்
இத்தனை இருந்தும் இயம்புவ தென்ன?
இயன்ற வரை பிறருக்காய் இயல்பாய் உதவிடு
வாழும்வரை கூட வருவோர் மனம்
வலிக்காமல் வாழ்ந்திடு
வந்தது ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை
வாழ்ந்த வாழ்க்கையை வாழ்த்தவேண்டும்
தலைமுறை, நம் பெயரை ஊர் சொல்லவேண்டும்
பலமுறை, உலகமே போற்ற வேண்டும்
ஏழுதல முறை.1!!
சாதிமதமில்லா சனத்தை படைப்பதும்
ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைப்பதும்
சாலையை கடக்க விழி இலாருக்கு வழிகாட்டவும்
பாலையை பண்படுத்தி பாங்காய் பயிர் இடவும்
உழவுத்தொழிலால் ஊரும் தழைத்திட வும்
களவுத் தொலின்றி கண்னியமாய் வாழ்ந்திடவும்
நோய் நொடிகள் இல்லா சமூகம் படைக்க
மாசில்லா தரணியில் கொசு இல்லாதிருந்தாலே
மானிடனை கொண்ட நோய் மாண்டு விடும்
 மறுகணமே,பிள்ளையின் பட்டு போன்ற பாதமது
சொட்டு சொட்டாய் மருந்திட்டால்
இளம் பிள்ளை வாத மெனும் ஊனமிலா து
மனிதசனம் படைத்திடலாம் ,
அவன் திட்டமிட்டு
படித்திட்டால் பின் நாளில் சோற்றுகு பஞ்சமில்லா
பெருவாழ்வு வாழ்ந்திடலாம் வளமுடனே!
காலை முதல் மாலை வரை கண்ணியம் மாறாது
கருத்தாய் இருந்திட்டால் இரவென்ன பகலென்ன
சாலை என்ன சோலை என்ன விதி என்ன வீதி என்ன
வீழ்ந்திடாது வாழ்ந்திடலாம்,வீரநடை போட்டிடலாம்
விண்ணுலகையும் வென்றிடலாம் வெறியுடனே!
சான்றோர் பலர் தோன்றி ,சாறாய்பிழிந்து தந்த
சத்தான வாக்கியத்தை முத்தாய் பகிர்ந்திட்டால்
சற்றும் தொய்வில்லை,சான்றோன் ஆகிடலாம்
கம்பன் போல் காவியம் படைத்து கவியரசனாய்
கவி பாடி புவியரசையும் புரட்டிடலாம்
அரம் செய்ய விரும்பு என்றாள் ஒளவை பாட்டி
குறளால் குரல் கொடுத்த வள்ளுவனும்
தன் வாக்கால் வாழ்ந்து வாழ்த்திச்சென்றார்
இளைஞனால் தான் விவேகமான இந்தியாவை
இளைய பாரத மாய்படைக்க முடியும் என
பறைசாற்றிச்சென்றார், சுவாமி,யாய் வழ்ந்தவர்,
ஆலயக்கூடத்தைவிட பள்ளிக்கூடமே மேல் என்ற
கனவு மெய்ப்படவேணுமென பாட்டுக்கொருவன்
பாரதியும் அவன் தாசனும் பண் நூரு படைத்திட்ட னர்
பைந்தமிழும் கற்றுத்தந்து இன்றய புலவர்களுக்கு
முன்னோடியாய் முண்டாசு கட்டி நின்றனர்
கனவு காணுங்களென கலாம் அவர் கூறுகின்றார்
பொருமை காத்திடுங்கள் பெருமை அடைவீர் என
பெருமகனார் சொல்லிச்சென்றார்,
காந்தி மகான் சொன்ன சொல்லால் உலகின்
கடைசிவரை வாழ்ந்திடுவார்
வலிமையான பாரதம் படைக்க
ஒற்றுமையான தேசம் படைக்க
சுகாதாரமான பாரதம் படைக்க
விழிப்புணர்வாய் இருந்திடுவோம்
வீரநடை போட்டிடுவோம்……..
சுந்தரக்கண்ணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு