பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

பாட்டுக்கொருவ‌ன் பார‌தி பிற‌ர்
பாட்டுக்குள்ளும் ஒருவ‌ன் பார‌தி
வீட்டுக்குள் அடிமை கொண்டவள்
வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான்
ஏட்டை தொட்டால் தீமை எனற நிலை மாற்றி
ஏட்டையும் பண் பாட்டையும்
பாடுத‌லாய் கண்டான்
மாட்டை கட்டியது போல்தொழுவில்
பார்த்தவளை மாடு என்ற சொல்லே
செல்வம் என பொருள் கண்டான்
கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும்
பெண் பாட‌ம் க‌ற்பிப்பதாய்
க‌ன‌வு க‌ண்டான்
காத‌லும் சாதியும் பெண்டிற்கில்லை
என்ற‌வ‌ன் காத‌லில் க‌னிந்து பெண்காவிய‌ம்
ப‌டைக்க‌க்க‌ண்டான்
ப‌ட்ட‌ங்களையும் பாட
திட்டங்களையும் பயின்றதோடு
ச‌ட்ட‌ங்க‌ளையும் ஆணுக்கு
ச‌ரியாக‌ ஆழ‌க்க‌ண்டான்
விட்ட‌த்தை பார்த்தேவிட‌லை
ப‌ருவ‌ம் க‌ழித்த‌வ‌ள்
திட்டம் போட்டுவாழ்க்கையை
திருத்திடக்கண்டான்
சுதந்திரக்கனவு சுந்தரமாய்
பலித்ததுநிர‌ந்த‌ர‌ க‌ன‌வுக‌ளும்
நிம்ம‌தியாய் ப‌லித்த‌து
பெண்ணுக்காய் க‌ண்ட‌க‌னா
புதுமை பெண்ணுக்காய்

அமைந்த‌த‌ன்றோ! ! ! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

காலம் மாறிப்போச்சு