பொன் மானைத் தேடி.........

.....
பொன்மானாய் தேடி வந்தோம் அது
பொய்மானாய் போய் விடுமோ !
பொற்குவியாய் நாடி வந்தோம் அது
வெற்குவியாய் ஆகிடுமோ !
பொற்கிளி தான் என எண்ணி , யதை
பெற்று விட ஓடி வந்தோம் கையில்
கிடைப்பதற்குள் காணாமல் போய்விடுமோ
BSNL – லில் வேலை இது
பத்திர மானதுதான் என எண்ணி
பணிந்து பணிந்து தான்பணி செய்தோம்
பத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப்
பத்திர மாய் ஆகிடுமோ விடுமோ !
இது பொன்முட்டை யிடும் வாத்து,
என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதை
பொருக்காத நிர்வாகமும் பொல்லாத அரசாங்கமும்
பொசுக்கித்தான் போட்டிடுமோ ! ”பங்கு” போட்டு
மாற்றாருக்கு விற்றுத்தான் தீர்த்திடுமோ
பத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்
பற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,
கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,
கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்து
வலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்று
காவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும்
எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோ
நிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலே
கண்ட கனா வாய் பலிக்காமல் போய்விடுமோ
இப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,
வறுமையோடு நித்தம் யுத்தம் புரிகின்றாய்
முடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுது
உன் கனவு,படியப்போகுது உன் நினைவு
ஓங்கி ஒலிப்போம் உலகமெல்லாம்
தோல்வி இனி உனக்கில்லை
துடிப்பாய் இருந்திடு தோழனே !
தேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராது
பாக்கியாய் இருக்கும் அரியர்சும் பட்டென
வந்து சேருமே ,EPF பும் ESI யும்
இனிமேல் முறையாய் ஆயிடுமே
 பத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்ததுபோல்
அடுத்த இலக்கு அது பதிநெட்டாயிரம் .....
இதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......
வேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றே
தீர்வாகும் , இதுதான் எமது முடிவாகும்
இடப்பக்கம் செல்லும் என் இனிய தோழனே ! முன்னேறி
”செல்லப்பா” உன்பாதையிலே, வெல்லப்பா உன் கொள்கைதனை
உன் பக்கம் நியாயம் இருக்க ,நாமும் உன்பக்கமிருக்க
ஏனிந்தசலசலப்பு எதர்கிந்த மனச் சலிப்பு
தோல்வி இனி உனக்கில்லை துவண்டிடாதே தோழனே
சிட்டுக்குருவிகள் கூட சிக்காமல் போய்விடலாம்
விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துவிடமாட் டோம்நாம்
ஏட்டில் எழுதியது இல்லாமல் போய்விடாது
காட்டில் லுள்ள மரங்கள் கூட வயதானால் கழிந்துவிடும் ,
நாட்டில்லுள்ள நம் ஊழியர்களும் கணிசமாக கழிந்திடுவார் ,
அவர்பணி யில் ஓய்வுதனைப் பெற்றுவிட்டால்,
இத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் மொரு
ஆயிரம் நாள் எண்ணிப்பொறு பல
ஆயிரம் பேருக்குமேல் நிரந்தரப் பணி கிடைத்திடுமே !
நிம்மதியும் வந்திடுமே ! வான்மதியும் நமை வாழ்த்திடுமே !
நீ தேடி வந்தது பொன்மான்தான்
நீ நாடி வந்தது பொற்குவிதான்
நீ வாங்கவந்தது பொற்கிழிதான்
எனும் காலம் வெகு தூரம் இல்லை
செங்கொடி என்றும் தாழ் ந்ததில்லை
செங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லை
போராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு