நம்பி கை வைப்போம்

வல்லரசு தேசத்தில் கூட
வாழ்வாதாரம் இழந்த நிலை
எம் நாட்டு மக்களுக்கோ
விலைவாசி உயர்ந்த நிலை
பரண் மேல் பருப்பு விலை
ஒரு ரூபாவாம் அரிசி விலை
தனியார் மயம் தாராள மயம்
இதுதான் இவர்களது தாரகமந்திரம்
இலவசங்கள் பல உண்டென்பார்
இவன் வசமுள்ள ஓட்டுக்காக
பல குடும்பங்கள் வறுமையில் வாட‌
சில கும்பங்களே அரசியலில் ஆட‌
போராட்டம் நடத்தகூட
போதுமான உரிமையில்லை
குண்டர்களும் தொன்டர்களும்
கும்பலாய் தாக்குகின்றனர்
குண்டு களும் தோட்டாகளும்
குறிபார்த்தே இருக்கின்றன‌
கொலையும் கொள்ளயும்
கொள்கையாகி விட்டன‌
புகைப்பதும் குடிப்பதும்
புனிதமாகிவிட்டன‌
நோய்களும் நொடிகளும்
நோகமல் உள்ளன
ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும்
மனிதா‌பிமான‌ம் ம‌லிந்து விட்ட‌ன‌
இதயம் கூட இயந்திரத்தில்
இயன்குகின்றனவாம்
இப்படி நாட்டில் பிரச்சினைகளோ
ஏராளம் இதில் எங்கள்
பிரச்சினையும் தாராளம்
கம்பம் நட்டோம்
கம்பி இழுத்தோம்
காளை போல்
கை வ‌ண்டி இழுத்தோம்
சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்
க‌டும் குழிகள் பல தோண்டிவிட்டோம்
சாக்க‌டையினுள் புகுந்து ப‌ல‌
ஜாயிண்டு க‌ள் அடித்துவிட்டோம்
க‌ணினியை கூட‌ க‌ச்சித‌மாய்
க‌ண்ணிய‌மாய் இய‌க்குகின்றோம்
சின்ன‌ சின்ன‌ எக்ஜேஞ்சு க‌ளுக்கு
நாங்க‌ளே இய‌க்குன‌ர்க‌ள்
ப‌ல‌ரின் வார‌ச்ச‌ம்ப‌ள‌ம் தான்
எங்க‌ளின் மாத‌ச‌ம்ப‌ள‌ம்
போராட்டம் பல செய்தோம்
பொருமையாய் இருந்திட்டோம்
ச‌ங்க‌த்தின்மேல் ந‌ம்பிக்கை
வைத்தோம் ச‌ம்ப‌ளத்தில்
உய‌ர்வு பெற்றோம்
முருகையா,செல்லப்பா
மீது ந‌ம்பிக்கை வைத்தோம் 
அவர்களும் ந‌ம்பி _கைவைத்தார்கள்
நல் அங்கிகார‌ம் பெற்று த‌ந்தார்கள்
அரிய‌ர்சும் வாங்கி த‌ந்தார்கள்
தோழ்கொடுக்கும் தோழமையை
தொடர்ந்து வணங்குவோம்
ப‌ணி நிர‌ந்த‌ர‌ம் என்ப‌தும்
நிக‌ழ்கால‌த்திலேயே நிக‌ழ்துவிடும்
ந‌ம்பிக்கையோடு இருப்போம்
நிம்ம‌தியோடு இருப்போம்
செங்கொடி என்றும்
தாழ்ந்த‌தில்லை
செங்கொடி இய‌க்க‌ம்
என்றும் வீழ்ந்த‌தில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!

ஐ எஸ் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன்
திருப்பூர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு