காலம் மாறிப்போச்சு
:
அம்மிகள் காணாது போனதோடு
அம்மாக்களும் காணாது போனார்கள்!
மம்மியாய் வாழ்கின்றவர்கள் டம்மியாய்
வாடகைக்கும் கிடைக்கின்றனர் !
அம்மாக்களும் காணாது போனார்கள்!
மம்மியாய் வாழ்கின்றவர்கள் டம்மியாய்
வாடகைக்கும் கிடைக்கின்றனர் !
கணினி என்பது மனிதவாழ்வில்
கணிசமான அங்கமாகிவிட்டது!
கணினியை கற்போர் காமத்தையும்
பயிலுகின்றனர்!
கணிசமான அங்கமாகிவிட்டது!
கணினியை கற்போர் காமத்தையும்
பயிலுகின்றனர்!
மென்பொருள் நிருவனங்களில்
படுக்கையறைகளும்
பதுங்கியிருக்கின்றனவாம்!
படுக்கையறைகளும்
பதுங்கியிருக்கின்றனவாம்!
திரைப் படங்களெல்லாம்
திரை யில்லாபடங்களாகவே
காட்சியளிக்கின்றன!
தமிழ்பாடல்களில் ஆங்கிலமே
அதிகமாயிற்று!,
திரை யில்லாபடங்களாகவே
காட்சியளிக்கின்றன!
தமிழ்பாடல்களில் ஆங்கிலமே
அதிகமாயிற்று!,
அங்கங்களை மறைத்த
ஆடைகள் அங்கங்கு மறைப்பதால்
ஆபாசமாகவே இருக்கின்றன!
ஆடைகள் அங்கங்கு மறைப்பதால்
ஆபாசமாகவே இருக்கின்றன!
குட்டிகளுக்கெல்லாம் புட்டிகளே
பாலூட்டுகின்றன!
பாலூட்ட படைத்தவைகளே !
படு கவர்ச்சியாக் கப்படுகின்றன!
பாலூட்டுகின்றன!
பாலூட்ட படைத்தவைகளே !
படு கவர்ச்சியாக் கப்படுகின்றன!
ஆ_வின் பாலெல்லாம்
ஆவி இல்லாது பைகளிலும்
கிடைக்கின்றன!
வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது
போய் ,பொய் விளம்பரமே
வியாபாரமாக்கப்படுகின்றன!
ஆவி இல்லாது பைகளிலும்
கிடைக்கின்றன!
வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது
போய் ,பொய் விளம்பரமே
வியாபாரமாக்கப்படுகின்றன!
அசல் என்ற உண்மை போய்
பொய் போலிகளே புரள்கின்றன!
பொன் நகை என்பது
பெண் நகையாகிவிட்டது !
பொய் போலிகளே புரள்கின்றன!
பொன் நகை என்பது
பெண் நகையாகிவிட்டது !
குங்குமத்தில் வைத்த
பொட்டு நிறம் மாறியதோடு
வடிவமும் மாறி ஒட்டவசதியாய்
பசையாக்கப்பட்டுள்ளது!
பொட்டு நிறம் மாறியதோடு
வடிவமும் மாறி ஒட்டவசதியாய்
பசையாக்கப்பட்டுள்ளது!
பெண்கள் ஆண்களின்
உடையிலேயே அலாதியாய்
உள்ளனர்!
உடையிலேயே அலாதியாய்
உள்ளனர்!
உடன் உறவுகளுக்குள் உடனிருந்து
மகிழ வேண்டியவர்கள்
உடல் உறவுக்குள்ளே
உல்லாசமயிருக்கின்றனர்!
மகிழ வேண்டியவர்கள்
உடல் உறவுக்குள்ளே
உல்லாசமயிருக்கின்றனர்!
கூட்டக குடி இருந்தவன்
தனித்தனியே தங்கிவிட்டான்
குடிப்பதும் புகைபதும்
புனிதமாகிவிட்டது
தனித்தனியே தங்கிவிட்டான்
குடிப்பதும் புகைபதும்
புனிதமாகிவிட்டது
துச்சாதனர்களே! காவலுக்கு
களமிரக்கப் படுகின்றனர்!
களமிரக்கப் படுகின்றனர்!
லட்சியம் என்பது லஞ்சமாகவும்
லச்சமாகவும் மாறிவிட்டன!
லச்சமாகவும் மாறிவிட்டன!
பிறக்கும் குழந்தை கூட
கை விரலுக்குள் கை பேசியை
மறைத்து வைத்துள்ளன!
கை விரலுக்குள் கை பேசியை
மறைத்து வைத்துள்ளன!
பள்ளிகளிலும் பள்ளியறை
உள்ளதாம்!
உள்ளதாம்!
இயந்திரதில் கூடஇதயம்
இயங்குகின்றனவாம்
இயங்குகின்றனவாம்
மனிதனே மனிதனை
கொல்லும் மனிதாபிமானம்
மலிந்துவிட்டது!
கொல்லும் மனிதாபிமானம்
மலிந்துவிட்டது!
உலகம் நாடகமேடையாம் ,
ஆம் மக்கள் நடிப்பதையே
வாழ்க்கை யாக்கிட்டார்கள்
ஆம் மக்கள் நடிப்பதையே
வாழ்க்கை யாக்கிட்டார்கள்
காலங்கள் மாறலாம்,
நாகரீககோலங்கள் மாறலாமா?
இந்தக்கால மாற்றங்களுக்கு
வரும் காலங்களே!
பதில்சொல்லட்டும்-
நாகரீககோலங்கள் மாறலாமா?
இந்தக்கால மாற்றங்களுக்கு
வரும் காலங்களே!
பதில்சொல்லட்டும்-
சுந்தரக்கண்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக